வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதை நிலவரப்படி (10.33AM ) மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயர்ந்து 73,934 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 39 புள்ளிகள் உயர்ந்து 22,417 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. Oil India, Bajaj Auto உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்குகள் சரிந்து காணப்படுகின்றன.