நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையே பிப்ரவரி மாதத்தில் 29 நாள்கள் வரும். இதை லீப் வருடம் என்பார்கள். உலகில் சராசரியாக தினமும் 3.5 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன.
அப்படி இன்று பிறக்கும் அனைவரும் தங்கள் பிறந்தநாளை அடுத்த 4 ஆண்டுகளுக்கு பிறகுதான் கொண்டாட முடியும்.
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், அர்ஜூனா விருது வென்ற பிரகாஷ் நஞ்சப்பா, பரதநாட்டிய கலைஞர் ருக்மிணி தேவி போன்றோர் லீப் வருடத்தில் பிறந்தவர்கள்.