போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறியதாக திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளது.
இந்த போராட்டத்துடன் அதிமுக நிற்கப் போவதில்லை என்றும் போதைப் பொருள் மாபியா கும்பல் முழுமையாக கைது செய்யப்பட்டு, தமிழகத்தில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.