தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரனா நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், 2024 IPL கோப்பையை விரைவில் CSKவின் வரவேற்பறையில் காண வேண்டும் என்ற ஒரே ஆசையுடன் அணியில் இருந்து விடைபெறுவதாகவும், சென்னையிடமிருந்து தனக்குக் கிடைத்த அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுக்காக நன்றி என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.