இந்தியாவில் ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்திருப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள்
கூறுகின்றனர்.
குறிப்பாக, காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெல்வதற்கு அவரது நியாய யாத்திரை முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
அதே நேரம், நியாய யாத்திரையின் போது ஏற்பட்ட பிரச்னைகளால் நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து விலகி சென்றதும், மம்தா பானர்ஜி ஒதுங்கி இருந்ததும் பின்னடைவாக
பார்க்கப்படுகிறது.