11 நாள்கள் ஓய்வுக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அவர் நடிப்பில் உருவாகிவரும் ‘வேட்டையன்’ படத்தின் ஷூட்டிங் இம்மாத தொடக்கத்தில் முடிவடைந்தது.
அதனைத் தொடர்ந்து சில நாள்கள் ஓய்வெடுக்க ரஜினி அபுதாபி சென்றிருந்தார். அங்கு அவர், கோயிலுக்குச் சென்று வழிபட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில் ‘கூலி’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள ரஜினி சென்னை திரும்பினார்.