CSK-LSG இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் 23ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்பதற்காக, CSK அணியினர் இன்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினர்.
லக்னோவில் நடைபெற்ற முந்தைய போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில், சொந்த மைதானத்தில் நடைபெறும் அடுத்த போட்டியில், சென்னை அணி பதிலடி கொடுக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.