குதிகால் வலி, முதுகு வலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க செல்ல வேண்டாம். நாற்காலியும், செருப்பும் கூட காரணமாக இருக்கலாம்.
அணிந்திருப்பது தரமான செருப்புதானா, நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா என்பதை கவனியுங்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, 5 நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்து கொள்ளுங்கள்.
இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.