அரண்மனை 4 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதற்கு இயக்குநர் சுந்தர் சி விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், “அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது.
ஆனால் கால்ஷிட் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியவில்லை. இதனால் விலகி விட்டார். மற்ற 3 பாக அரண்மனை படங்களுடன் ஒப்பிடுகையில் அரண்மனை 4 படம் மாறுபட்ட கோணத்தில் இருக்கும்” என்று கூறியுள்ளார்.