தமிழக மக்கள் மீதான அன்பு காரணமாகவே, தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி அடிக்கடி வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
தேர்தலை மனதில் வைத்தே மோடி அடிக்கடி தமிழகம் வருவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதற்கு பதிலளித்த அனுராக், “தமிழக மக்கள் மீதான அன்பினாலும், தமிழகம் வளரவுமே பிரதமர் அடிக்கடி வருகிறார்.
இதை முதல்வர் விமர்சித்திருப்பது கவலை தருகிறது” என்றார்.