விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 82 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் பயிற்சி வகுப்பை முடிக்காத போர் மேன்கள் கண்காணிப்பாளர்களைக் கொண்டு பட்டாசு உற்பத்தி செய்வது தெரிந்தால் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படும் என ஆட்சியர் ஜெயசீலன் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.