அடுத்த 15 ஆண்டுகளில், இந்தியாவில் 78.26 லட்சம் கோடியை ஐரோப்பிய நாடுகள் முதலீடு செய்ய உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், “இந்தியா & ஐரோப்பிய வர்த்தக சங்கம் இடையே கையெழுத்தாகியுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அடுத்த ஆண்டு அமலுக்கு வரும்.
இதனால், ஐஸ்லாந்து, லீக்டன்ஸ்டைன், நார்வே, சுவிஸ் ஆகிய 4 நாடுகளின் பொருள்கள் இந்தியவில் விலை குறையும்” என்றார்.