காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளில் செய்த பணிகளை 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான அரசு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தை 80 முறை காங்கிரஸ் உடைத்து உள்ளதாகவும், இதுபெரிய பாவம் என்றும் விமர்சித்தார்.
சாதி, மதம், மொழி அடிப்படையில் யாரும் உயர்வானவர் இல்லை, தகுதியே ஒருவரை உயர்வானராக்குகிறது என்றும் கட்கரி குறிப்பிட்டார்.