சீன ஆய்வாளர்கள் புதிதாக ஒரு செயற்கை வைரஸை உருவாக்கியுள்ளனர். மேற்கு ஆப்ரிக்காவில் பல ஆயிரம் மக்களைக் கொன்ற எபோலா வைரஸ் குறித்து ஆய்வு செய்வதற்காக அதைப் போன்றே செயற்கை வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை சோதனை செய்தபோது, இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி ஆகியவற்றை பாதித்து மூன்று நாட்களில் மரணத்தை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது.
ஆனால், இவை வெளியே பரவாது என்பது சற்று நிம்மதியான விஷயம்.