மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே கரையை கடந்த ‘ரெமல்’ புயலால் மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
புயல் கரையை கடந்த போது அதிகபட்சமாக 135 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. புயல் பாதிப்பால் மொத்தம் 16 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் சென்று நேரில் ஆய்வு செய்தார்.