கடந்தாண்டு (2023) இதே நாளில், CSK அணி 5ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
குஜராத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டதால், CSK அணிக்கு 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நிதானமாக விளையாடி வந்த CSK அணிக்கு, கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது, CSK வீரர் ஜடேஜா முதல் பந்தை சிக்சரும், 2ஆவது பந்தை பவுண்டரியும் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.