குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, குமரி, தூத்துக்குடியில் கனமழை பெய்யும் என்றும், பிற பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.