தென் கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில், இந்திய மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது.
துருக்கிக்கு எதிரான இறுதிப் போட்டியில், இந்தியா சார்பாக ஜோதி, அதிதி, பர்னீத் ஆகியோர் களமிறங்கினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஒரு செட்டை கூட விட்டுக் கொடுக்காமல் 232-226 என்ற புள்ளிக் கணக்கில் துருக்கியை வீழ்த்திய இந்திய அணி, தொடர்ந்து 3ஆவது முறையாக உலகக் கோப்பையில் தங்கம் வென்றுள்ளது.