இந்தியாவில் நீருக்கு அடியில் இயங்கும் முதல் மெட்ரோ ரயிலை கொல்கத்தாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். நகர்ப்புற போக்குவரத்தை மாற்றி அமைப்பதற்கான முக்கிய திருப்புமுனையாக கருதப்படும் இந்த மெட்ரோ ரயில் பாதை, ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் வழித்தடத்தில் 5.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஹூக்ளி நதியின் கீழே கட்டமைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா நகரத்தின் இரண்டு பரபரப்பான பகுதிகளை விரைவாக சென்றடைய முடியும்.