மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கடந்த 20ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் 27ம் தேதியுடன் முடிந்தது.
28ம் தேதி முதல் வேட்புமனு பரிசீலனை நடந்து, 1,085 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும்.
அத்துடன், சின்னம் ஒதுக்கப்படாத கட்சிகள், சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கப்பட உள்ளது.