ஈரோட்டில் இன்று காலை மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலினிடம், மகளிர் உரிமைத் தொகை 1000 தனக்கு கிடைக்கவில்லை என பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு உங்கள் விண்ணப்பத்தில் ஏதாவது பிரச்னை இருக்கும் என முதல்வர் கூற, அதற்கு அப்பெண் ரோட்டில் உட்கார்ந்து வியாபாரம் செய்கிறேன்.
2 முறை விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை என குமுறினார். ஆனால், அப்பெண் அரசு ஊழியரின் மனைவி என கூறப்படுகிறது.