கோடைக்காலத்தில் ஏற்படும் உடல் சூட்டின் காரணமாக ஏற்படும் வயிறு தொடர்பான பிரச்னைகளில் இருந்து தப்பிக்க மஞ்சள் பானகத்தைப் பருகலாமென மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.
பசும் மஞ்சளைத் தோல் சீவி அரைத்துச் சாறு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சீரகம், மிளகு, ஏலக்காய், சுக்கு, சாதிக்காய், எலுமிச்சைச் சாறு, தேன் கலந்தால் மஞ்சள் பானகம் ரெடி.
இப்பானகத்தைக் குடித்தால் அஜீரணத்தால் வரும் தலைவலி நீங்குமாம்.