இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி புகழேந்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், மனுக்கள் தொடர்பாக 3 மணிக்கு முன்னதாக எழுத்துப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.