அரபிக்கடலில் இன்று புதிய புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த சில மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் இருந்து மாலத்தீவை ஒட்டியுள்ள பகுதிகள் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது முன்னேறி வரும் நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது.இதனால் அடுத்த நான்கு நாட்களில் கேரளா, மாஹே, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் லட்சத்தீவுகளில் மழை பெய்யும். இந்த வாய்ப்பு உள்ளது.
18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
முன்னதாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இருக்கலாம்.
![](https://newstamil.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2023/12/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-2-1.jpg)
அதேபோல், நாளை (10ம் தேதி) முதல் 14ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மூன்று நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.