கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தனி உதவியாளர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களுக்கான குரூப்-4 பதவிக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் இருந்த நிலையில், அதுதொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏற்கனவே அறிவித்தபடி, கடந்த பிப்.28ஆம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.