காங்கிரஸ் கொடுத்த திட்டங்களை விட, அதிக திட்டங்களை பிரதமர் மோடி தமிழகத்துக்கு கொடுத்துள்ளார் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிதியை பொருத்தவரை மாநில பேரிடர் நிவாரணத்தை கணக்கிட்டு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் தமிழகத்துக்கு நிதியும், நீதியும் மத்திய அரசு வழங்கியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.