ஏப்.2 முதல் 4ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள் வெளியே வர முடியாமல் முடங்கியுள்ளனர். இந்நிலையில், மழை பெய்யும் என வானிலை மையம் கூறியதால், மக்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இருப்பினும், வெப்பநிலை அடுத்த 5 தினங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.