நடிகர் கருணாஸ் சிவகாசியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக நடிகர் கருணாஸ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது, “ இந்த மண்ணிற்காக நம் முன்னோர்கள் மாண்டு பெற்ற சுதந்திரத்தை கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி கேள்விக்குறியாக்கி வைத்துள்ளார்.
மேலும், வெள்ள பாதிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி வழங்காமல் தமிழர்களை அவமதித்தார்” என விமர்சித்தார்.