வெயில் காலத்தில் ஏற்படும் வெப்ப புண்கள், அரிப்பு & பூஞ்சை தொற்று போன்ற சரும நோய்களில் இருந்து உடலை தற்காத்துக்கொள்ள மூலிகைப்பட்டை குளியலை சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது.
வேப்பம், சரக்கொன்றை, புங்கம், அரசம், ஏழிலைப்பா பாலை ஆகியவற்றின் பட்டைகளை தலா பத்து கிராம் எடுத்து, அவற்றை மஸ்லின் துணியில் முடிச்சிட்டு வெந்நீரில் போட்டு அதில் குளியுங்கள். உடலில் உள்ள கழிவுகள் நீங்கி சருமம் பொலிவு பெறும்.