பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் ரன் மழை பொழிந்து பெங்களூரு அணியை தினேஷ் கார்த்திக் வெற்றி பெறச் செய்தார். முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 175 ரன்கள் எடுத்தது.
176 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய பெங்களூரு அணிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக், முதல் பந்தில் 6 ரன்களும், அடுத்த பந்தில் 4 ரன்களை அடித்து வெற்றி தேடித் தந்தார்