சூர்யா நடித்த ‘அஞ்சான்’ திரைப்படம், விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். சென்னை கமலா திரையரங்கில் ‘பையா’ திரைப்படம் நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
அதனை ரசிகர்களுடன் கண்டு ரசித்த லிங்குசாமி, அஞ்சான் படத்தின் தோல்விக்கு காரணம் அதன் நீளம் தான். அதனால் படத்தை ரீ-எடிட் செய்து, ரிலீஸ் செய்யப் போகிறேன்” எனக் கூறியது சூர்யா ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தி உள்ளது.