டி20 உலகக் கோப்பைத் தொடரின் ஒரு பகுதியாக இந்தியா – பங்களாதேஷ் இடையேயான பயிற்சி ஆட்டம் நேற்று நடந்தது.
அப்போது ரசிகர் ஒருவர், தடைகளை மீறி மைதானத்திற்குள் ஓடி வந்து, ரோஹித் ஷர்மாவை கட்டிப்பிடிக்க முயன்றார்.
இதனைக் கண்ட அமெரிக்க போலீசார் அந்த நபரை மறித்து, கீழே தள்ளி கைவிலங்கு போட முயன்றனர்.
இதனை கவனித்த ரோஹித், ரசிகரை பொறுமையாக கையாளும்படி கோரினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.