ஓய்வு பெற்ற ஊழியர்களது பணிக்கால பலன்கள், அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை
அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
ஜூன் 24 காலை 10 மணி முதல் 25ம் தேதி காலை 10 மணி வரை தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் போராட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பேருந்து சேவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.