சென்னை மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கிய வழக்கில் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டியது தொடர்பான பிரச்னையில், மெட்ரோ ரயில் உதவி மேலாளரை மதுபோதையில் இருந்த வேல்முருகன் தாக்கியுள்ளார்.
இதுதொடர்பான புகாரின்பேரில், ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.