பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இருந்து ஹன்சா நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 21 பேர் படுகாயம் அடைந்த நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
காரகோரம் நெடுஞ்சாலையில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அங்கிருந்த
பள்ளத்தாக்கில் உருண்டதாக விசாரணையில் தெரிய வந்தது.