ராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல், வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பாக சுயேச்சையாக போட்டியிடும் மன்சூர் அலிகானுக்கும் பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் வரும் மக்களவைத் தேர்தலில் இருவரும் ஒரே சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.