டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் கடந்த இரண்டு நாள்களாக சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அதில் தோனி கலந்துகொள்ளவில்லை.
மேலும், விக்கெட் கீப்பிங் பயிற்சியையும் மாற்று விக்கெட் கீப்பரான ஆரவெல்லி அவனிஷ் மேற்கொண்டு வருகிறார். தோனி தொடர்பான இந்த செய்தி சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.