டெக்கான் குரோனிக்கிள் படி, நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஷ்ரத்தா தாஸ் மற்றும் பிற பயணிகளுடன் மும்பையில் இருந்து ஹைதராபாத் சென்ற ஏர் விஸ்தாரா விமானம் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டது.
இச்சம்பவத்தால், பயணிகள் அச்சத்தில் தவித்தனர். 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு மும்பையில் இருந்து ஹைதராபாத் சென்ற விமானம் மும்பை திரும்பியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விமானத்தில் பயணம் செய்த ராஷ்மிகா மந்தனா, நடிகை ஷ்ரத்தா தாஸின் படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, “இன்று நாங்கள் மரணத்திலிருந்து தப்பித்தோம்” என்று பதிவிட்டுள்ளார்.