வாக்கு கேட்டு மட்டும் வந்து செல்ல தமிழ்நாடு என்ன சரணாலயமா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று வாகனப் பேரணி சென்றார். அதனை சுட்டிக்காட்டிய முதல்வர், தேர்தலின்போது மட்டும் சந்திக்க தமிழக மக்கள் என்ன 2ஆம் தர குடிமக்களா? என வினவினார்.
மேலும், சமூக நீதி மீது அக்கறையுள்ள பிரதமரையே மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.