இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இதையடுத்து இரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி தற்போது ராஜ்கோட்டில் நடக்கிறது.
இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இந்திய வீரர் அஷ்வின் 500வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். இந்நிலையில், குடும்ப அவசரநிலை காரணமாக அஸ்வினுக்கு இரண்டாவது நாளுக்குப் பிறகு அவர் போட்டியில் இருந்து விலகுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. குடும்ப உடல்நலக் குறைவால் அஸ்வின் சென்னை திரும்பினார்.
இதற்கிடையில், பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடும்ப அவசரநிலை காரணமாக சிறிது நேரம் இல்லாத அஸ்வின் அணிக்கு திரும்பியதை அணியின் நிர்வாகம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. போட்டியின் நான்காவது நாளில் அஸ்வின் மீண்டும் களமிறங்குவார். மேலும் அவர் அணி மற்றும் போட்டிக்கு தொடர்ந்து பங்களிப்பார் என்பதை உறுதி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவரை மீண்டும் களத்திற்கு வரவேற்பதில் நிர்வாக ஊழியர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.