2023ஆம் ஆண்டில் 31500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியர்களின் தலைமுடி ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2018ஆம் ஆண்டு இது வெறும் 5290 கோடியாக இருந்தது. இந்த வகை முடிகள் செயற்கை விக் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
உலகம் முழுவதும் செயற்கை முடிக்கான தேவை அதிகரித்திருப்பதால் முடிகளின் தேவை அதிகரித்துள்ளது. அதனை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இந்தியா திகழ்கிறது.