கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் பணி 12 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.
விஜயபுராவில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை, 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.
15 அடி ஆழத்தில் குழந்தை சிக்கிய நிலையில், 5 அடிக்கு மேல் பாறைகள் இருப்பதால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.