தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பத தொடங்குகிறது.
மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு நாளை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
இந்தத் தேர்தலில் 3.17 கோடி பெண்கள், 3.06 கோடி ஆண்கள், 8,467 மூன்றாம் பாலினத்தவர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.