இந்தியாவில் ஒரே மாதத்தில் 76 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பல கோடி பேர் தங்களது தகவல் தொடர்புக்கு வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
தேவையற்ற, போலிச் செய்திகள், ஆபாச வீடியோக்கள் பகிர்வது தெரிந்தால், அந்த கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கி வருகிறது.
அதன்படி, இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 76.28 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.