ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் எந்தெந்த வீரர்களை அணியில் எடுக்கலாம், எந்தெந்த வீரர்கள் எப்படி ஆடுவார்கள் என அணியின் விவரங்கள் அத்தனையையும் ஜோதிடரிடம் கொடுத்தே இகோர் ஸ்டிமாக் ஆலோசனை பெற்றிருக்கிறார்.ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த விஷயம் குறித்து செய்தி வெளியிட்டிருக்கிறது. அதாவது, கடந்த ஆண்டு ஆசியக்கோப்பை தகுதிச்சுற்றில் இந்திய அணி ஆடிய போது இந்திய கால்பந்து சங்கத்தின் அதிகாரி ஒருவரின் மூலம் ஒரு ஜோதிடரை இகோர் ஸ்டிமாக் அணுகியிருக்கிறார். அந்த தகுதிச்சுற்றின் ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் எந்தெந்த வீரர்களை அணியில் எடுக்கலாம், எந்தெந்த வீரர்கள் எப்படி ஆடுவார்கள் என அணியின் விவரங்கள் அத்தனையையும் ஜோதிடரிடம் கொடுத்தே இகோர் ஸ்டிமாக் ஆலோசனை பெற்றிருக்கிறார். மேலும், முக்கியமான போட்டிகளின் போது முக்கியமான சில வீரர்களை ஜோதிடரின் ஆலோசனைப்படி ஆடவிடாமலும் செய்திருக்கிறார்.
ஜோதிடருக்கும் இகோர் ஸ்டிமாக்குக்கும் இடையிலான உரையாடல்களும் வெளியாகியிருக்கின்றன. அதில், ஒவ்வொரு வீரர்களைப் பற்றிய மதிப்பீடுகளையும் நட்சத்திரங்களின் அடிப்படையில் ஜோதிடர் கூறியிருக்கிறார். ‘ஹாய் பூபேஷ், உங்களுடன் வருங்கால திட்டங்களைப் பற்றிப் பேசியதில் மகிழ்ச்சியடைகிறேன். கீழ்க்காணும் வீரர்களைப் பற்றிய உங்களின் அனுமானங்களை கூறுங்கள்.’ என ஒரு செய்தியை இகோர் ஸ்டிமாக் ஜோதிடருக்கு அனுப்பியிருந்ததாகவும் அந்த நாளிதழ் கூறியிருக்கிறது. மேலும், ஊர், பிறந்த நேரம், பிறந்த தேதி ஆகியவற்றையும் ஜோதிடருடன் பகிர்ந்திருக்கிறார்.
மேலும், இந்திய அணிக்காக ஆலோசனை வழங்கியதற்காக அந்த ஜோதிடர் ரூ.12 முதல் 15 லட்ச ரூபாயை சன்மானமாகவும் வாங்கியிருக்கிறார்.
இந்த விவகாரம் இப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.