ஐபிஎல் போட்டியில் தோல்வி அடைந்ததை மறந்து, மும்பை வீரர்கள் ஹோலி கொண்டாடி வருகின்றனர். நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை, வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மும்பை வீரர் ரோகித் ஷர்மா, தனது அணியினருடன் கோலாகலமாக ஹோலியை கொண்டாடினார். சக வீரர்கள் முகத்தில் சாயம் பூசி, தண்ணீர் அடித்து விளையாடிய வீடியோ, மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.