டெல்லியில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை, பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார்.
மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்தது. நடப்பு அமைச்சரவையை கலைப்பதற்கான பரிந்துரை தீர்மானத்தை, அப்போது அவர் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களுக்கு இன்றிரவு 8 மணிக்கு குடியரசுத் தலைவர் விருந்து அளிக்கிறார்.