உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீரர் சரப்ஜோத் சிங் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
ஜெர்மனின் முனிச் நகரில் ஆடவருக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் முதலிடம் பிடித்து, சரபோத் தங்கம் வென்றார்.
50 மீ., ரைபிள் 3 பொசிஸ்சன் பிரிவில் 3ஆம் இடத்தைப் பிடித்த சிப்ட் கவுர் ஷம்ரா வெண்கலத்தைக் கைப்பற்றினார்.
இதுவரை 4 பதக்கங்களை வென்ற இந்தியா பதக்க பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது.