காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், மக்களவைக் குழுத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டுமென சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரும்பாலான மூத்த தலைவர்கள், ராகுல்தான் மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவராக வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
மக்களவையில் 99 (+1 சுயேச்சை) இடங்களை பெற்றுள்ள காங்கிரஸ் 10 ஆண்டுகளுக்கு பிறகு, எதிர்க்கட்சி அந்தஸ்தை இம்முறை பெறவுள்ளது.