ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததை அடுத்து, அந்நாட்டில் ஜூன் 28ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள், எம்.பிக்கள், அரசு அதிகாரிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தில் 14ஆவது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி குறித்து முடிவெடுக்கப்பட்டது.
முன்னதாக, துணை அதிபர் முகமது முக்பர் டைக்கால அதிபராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.